Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM
அமெரிக்காவை சேர்ந்த பைசர், ஜெர்மனியை சேர்ந்த பயோ என்டெக் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசி தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
இதுகுறித்து பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் கூறியதாவது:
உலகம் முழுவதும் சுமார் 43,000 பேருக்கு எங்களது தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்தோம். இதில் 90 சதவீதம் பேருக்கு கரோனா எதிர்ப்பு சக்தி உருவானது. யாருக்கும் பெரிதாக பக்கவிளைவுகள் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகளை தயாரித்துவிடுவோம். அடுத்த ஆண்டுக்குள் 130 கோடி தடுப்பூசிகளை தயாரிப்போம். அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT