Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
தேனி
தேனி மாவட்டம், வட வீரநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (நவ.24) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பேருந்து நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜிநகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல்
கொடைக்கானல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நவ.25-ல் நடைபெற உள்ளது. எனவே கொடைக்கானல் நகரம், வில்பட்டி, சவரிக்காடு, ஊத்து, மச்சூர், பெருமாள்மலை, பி.எல்.செட், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பெரியூர், பாச்சலூர், கே.சி.பட்டி மற்றும் இதைச் சுற்றியுள்ள மலைகிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை வத்தலகுண்டு மின் பகிர்மான செயற்பொறியாளர் டி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT