Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

நாகையை அடுத்த ஐவநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வரும் 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை இழிவு படுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்தும், 100 நாள் வேலை உறுதி யளிப்புத் திட்டத்தை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்டத் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சரபோஜி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x