Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
விருத்தாசலம் பேருந்து நிலை யத்தில் நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரை விருத்தாசலம் காவல் ரோந்து படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் கத்தி இருந்துள்ளது. பின்னர் அவர்களை விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் விளாங்காட்டூர் பிரதீப் (20) மற்றும் சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 2 சிறார்கள் என தெரியவந்துள்ளது. அவர் களிடம் இருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இதுதொடர்பாக விருத் தாசலம் அடுத்த விளாங்காட்டூரை சேர்ந்த மணிகண்டன் (22) என்ப வரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் சென்னை திருவேற்காட் டில் ஒருவரை கொலை செய் வததற்காக ஆயுதங்கள் வாங்கி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT