Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM
காரைக்குடியை மாநகராட்சி ஆக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்த விவரங்களை, நகராட்சி நிர்வாக ஆணையரகம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுள்ளது.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது, 1928-ல் காரைக்குடி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பிறகு 1988-ல் தேர்வுநிலை நகராட்சியாகவும், 2013-ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 13.75 ச.கி.மீ. பரப்பு கொண்டது. ஆண்டு வருவாய் ரூ.25 கோடிக்கு மேல் உள்ளது.
அழகப்பா பல்கலை., சிக்ரி மற்றும் போக்குவரத்துக் கழகம், பிஎஸ்என்எல், ஆவின் மண்டல அலுவலகங்கள் உள்ளன. காரைக் குடிக்கு தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதையடுத்து, காரைக் குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த 2015 மே மாதம் அப் போதைய நகராட்சித் தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காரைக்குடி நகராட்சியுடன் கோட்டையூர் பேரூராட்சி மற்றும் சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி ஊராட்சிகள் இணைக்கப்படும். 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, காரைக்குடி நகராட்சியில் 1.06 லட்சம் பேர் உள்ளனர். மற்ற பகுதிகளையும் சேர்க்கும்போது 3 லட்சத்துக்கு மேல் உயரும். பரப்பும் 83.44 சதுர கி.மீ. ஆக விரிவடையும். ஆண்டு வருவாயும் ரூ.30 கோடியாக உய ரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அரசியல் அழுத்தம் இன்றி நடவடிக்கை இல்லை. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என திமுக உறுதி அளித்தது. தற்போது அதற்கான சாத்தியக்கூறு குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையரகம் விவரம் கோரியுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்தாண்டே காரைக்குடி தரம் உயருமா என்பது தெரியாது,’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT