Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

தருமபுரியில் பாஜக ஆர்ப்பாட்டம் :

தருமபுரி

பிரதமரை தவறாக விமர்சித்த கிறிஸ்தவ மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். பிரதமர் மோடி, பாரத அன்னை ஆகியோரை விமர்சித்த கிறிஸ்தவ மதபோதகரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் பாஸ்கர், முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி, பாலக்கோடு பேருந்து நிலையத்திலும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x