Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM
மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளராகப் பணியாற்றியவர் லலித்குமார் மன்சுகானி. இவர் தென் மத்திய ரயில்வேக்கு மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளராக டி.ரமேஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பொறுப்பேற்றார். இவர் ஒரு மின்னணு பொறியாளர். 1996-ம் ஆண்டு ரயில்வே சமிக்ஞை (சிக்னல்), தொலைதொடர்பு பிரிவில் பணியில் சேர்ந்தார். இப்பிரிவில் 23 ஆண்டுகளாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய அமைப்பில் ரயில்வே மின்மயமாக்கல் இணை முதன்மைப் பொறியாளராகவும், இந்திய ரயில் டெல் கார்ப்பரேஷன் என்ற பொதுத் துறை நிறுவனத்தில் பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT