Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM

சென்னையில் நாளைமுதல் - 10 நாட்கள் பராமரிப்புப் பணிகள் : குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால், பருவமழைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதி 1 முதல் 15 வரை மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ள தெருக்களில் கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் நாளைமுதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்பணியின்போது திருவொற்றியூர், ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் உட்பட 15 பகுதிகளில் உள்ள 801 தெருக்களில் பெருமளவில் கழிவுநீர் செல்லும் குழாய்களில் உள்ள கசடுகள் அகற்றப்படும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான குறைகளை தொடர்புடைய பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனையிலும் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x