Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

நிதி நிறுவன கடனை செலுத்த அவகாசம் வேண்டும் மதுரை ஆட்சியரிடம் கூலி தொழிலாளர்கள் மனு :

தினக் கூலித் தொழிலாளர்கள் சார்பில் இந்து மக்கள் நல இயக்கத்தின் கருப்பையா மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனிடம் நேற்று மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

மதுரை சந்திரலேகா நகர், கல்மேடு, களஞ்சியம் நகர் ஆகிய பகுதிகளில் தினக் கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் கருதி பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றுள்ளனர். இதை தினசரி, வாரத் தவணைகளில் செலுத்தி வந்தனர்.

தற்போது கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் கடனை செலுத்த முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. இருப்பினும் நிதி நிறுவனப் பணியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் உடனே கடனைச் செலுத்தும்படி தரும் நெருக்கடியால் பலரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இதில் இருந்து கூலித் தொழிலாளர்களைப் பாதுகாக்க கடனை திருப்பி செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x