Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

வாக்கு எண்ணும் மைய அலுவலர்கள் - 911 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை :

வாக்கு எண்ணும் மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 911 பேருக்கு நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அங்கு நடைபெற்ற சிறப்பு முகாமில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்கு எண்ணும் மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 911 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 155 பேருக்கு 2-வது தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

வாக்கு எண்ணும் இடத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அதில் 153 பேர் பரிசோதனை செய்துக்கொண்டனர். தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் அனைவரும் கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் இடத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அதில் 153 பேர் பரிசோதனை செய்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x