Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM
கோவை தெற்கு தொகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்காக பாஜக சார்பில் இலவச வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில்உள்ள பாஜக மாவட்ட அலுவலகத் தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இலவசவாகன சேவையை தொடங்கிவைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோவைதெற்கு தொகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தச் செல்பவர்கள் அழைத்தால், அவர்கள் இலவச வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதோடு, தடுப்பூசி தொடர்பான விழிப்பு ணர்வு வாகன சேவையும் தொடங் கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மாநகரில் சுற்றிவந்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும், கரோனா பாதித்த குடும்பத்தில் உள்ள முதியவர்கள், குழந்தைகளை கவனித்துக்கொள் ளவும் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம்.அவர்களின்வீடுகளுக்கு மருந்துகள், அத்தியா வசியப் பொருட்களை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களுக்கு 0422-4379903, 8675555666, 978868 8553 என்ற எண்களில் மக்கள் தொடர்புகொள்ளலாம்"என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT