வெள்ளி, ஏப்ரல் 26 2024
Last Updated : 07 Apr, 2021 03:17 AM
Published : 07 Apr 2021 03:17 AM Last Updated : 07 Apr 2021 03:17 AM
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி சிறுமலர் பள்ளி வாக்குச்சாவடி முன்பு திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பறக்கும் படையினர் மூன்று பெண்களை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பாமக வேட்பாளர் திலகபாமா உள்ளிட்ட கட்சியினர் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி, வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன்பிறகு சின்னாளபட்டி காவல் நிலையத்தில் திலகபாமா புகார் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT