Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

மார்ச் 25-ல் இபிஎஃப் குறைதீர்வு கூட்டம் :

சென்னை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், ஓய்வூதிய குறைதீர்வு கூட்டம் வரும் 25-ம் தேதி நடத்தப்படுகிறது.

தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) அலுவலகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் 25-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.

எனவே, ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்கு தீர்வுகாண விரும்பும் ஓய்வூதியர்கள் வரும் 22-ம் தேதிக்குள் நேரில் அல்லது, pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரியில் ‘PENSIONADALAT FOR EPS 1995’ என்று குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்என்று சென்னை வடக்கு, தெற்கு மண்டல அலுவலக, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 ரிதுராஜ் மேதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x