Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

பஞ்சப்படி உயர்வை கேட்டுப்பெற தொழிலாளர்களுக்கு அறிவுரை

திருப்பூர்: திருப்பூர் சிஐடியு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறும் போது, "கடந்த 2020 நவம்பர் மாத சென்னை விலைவாசி புள்ளி 36530-ஆக உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டால் பனியன் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியாக மட்டும் ஷிஃப்ட் ஒன்றுக்கு ரூ.165.34 வரும். எனவே பீஸ்ரேட், ஷிஃப்ட் ரேட், ஒப்பந்தம் என அனைத்து பிரிவு பனியன் தொழிலாளர்களும், உயர்த்தப்பட்ட பஞ்சப்படியைக் கேட்டுப் பெற வேண்டும். பஞ்சப்படி உயர்வை வழங்காத நிறுவனங்களில் பணிபுரியும்தொழிலாளர்கள், உடனடியாக சிஐடியு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x