Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இரவுப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(57) துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே அப்துல் ஷமீம், தவுபீக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, சென்னை மண்ணடியைசேர்ந்த கலியத் (எ) சிராஜுதீன் (எ) சிகாப்புதீன்(39) வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி கத்தாரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரது பெற்றோர் கோவை போத்தனூர் அருகேயுள்ள திருமறை நகரில் வசிக்கின்றனர். அவர்களது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். சிகாப்புதீனின் செயல்பாடுகள் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்த பென் டிரைவ், சிம்கார்டு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT