Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

கந்தூரி விழா

மேலப்பாளையம் ரிபாஈ தைக்காவில், ரிபாஈ நாயகத்தின் 864-வது வருடாந்திர பெரிய ராத்தீபு கந்தூரி விழா வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கந்தூரி விழா நடக்கிறது. தென்னிந்திய ரிபாஈ தர்காவின் தலைவர் எஸ்.முஹம்மது புஹாரி அலிஷா கலீபா ஜதரூஸ் ரிபாஈ தலைமை வகிக்கிறார். பக்தி சொற்பொழிவு, சிறப்பு மலர் வெளியீடு, அதிகாலை 4 மணிக்கு துஆ ஓதுதல், பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x