Published : 01 Jan 2021 07:52 AM
Last Updated : 01 Jan 2021 07:52 AM

வழிபாட்டுத் தலங்களில் நேரக் கட்டுப்பாடு நீக்கம், படப்பிடிப்புகளுக்கு முழு அனுமதி ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு காணும் பொங்கலன்று கடற்கரையில் கூட தடை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு கூடுதல் தளர்வு களுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊர டங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திரைப் படம், சின்னத்திரை படப்பிடிப்புகள் முழுமையான பணியாளர்களுடன் நடக் கலாம், அனைத்து வழிபாட்டு தலங்களி லும் நேரக் கட்டுப்பாடுகள் நீக்கம் போன்ற தளர்வுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. கரோனா பரவல் குறையத் தொடங்கியதும் பல்வேறு தளர்வுகளுடன் மாதந்தோறும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த டிச.1-ம் தேதி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நேற் றுடன் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்ட னில் இருந்து இந்தியா வந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு புதிய கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்திலும் சிலருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கை நீட்டிப்பது, புதிய வரை கரோனா பரவலை தடுப்பது தொடர்பாக கடந்த 28-ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மத் திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் ஜன.31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பால் அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கள், தற்போதுள்ள கரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமி ழகத்தில் தற்போதுள்ள பொது ஊரடங்கு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க் காணும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

l நிலையான வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி, உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சம் 50 இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 பேர் பங்கேற்கும் வகையில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளை யாட்டு, கலாச்சாரம், கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த ஜனவரி 1-ம் தேதி (இன்று) முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங் களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சியில் காவல் ஆணையரிடம் முன்அனுமதி பெறுவது அவசியமாகும்.

l திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு, திறந்த வெளியில் நடை பெறும் படப்பிடிப்புகளுக்கு உரிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி யாற்றுவோரின் எண்ணிக்கை உச் சவரம்பின்றி அனுமதிக்கப்படுகிறது.

l அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகிறது.

தொடரும் தடைகள்

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சில செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

l புதிய உருமாறிய நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இ-பதிவு முறை தொடரும்.

l மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்கு வரத்துக்கான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், தமிழகத்திலும் அதற்கான தடை தொடரும்.

l தமிழகம் முழுவதும் நோய்க்கட்டுப் பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

காணும் பொங்கல் தடை

காணும் பொங்கல் அன்று கடற்கரை களில் அளவுக்கு அதிகமான பொது மக்கள் கூடுவர். இதன்மூலம் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் நாளான ஜன.16-ம் தேதி மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துவரும் சூழல் நீடிக்கவும், அதை முழுமையாக தடுக்கவும், அனை வரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை களை அனைவரும் தவறாமல் கடை பிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அரசுக்கு ஒத்துழைப்பு

பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் கண்டிப் பாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றுடன் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் நோய்த் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். எனவே, அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக் கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x