Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

டிச.2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் அமைச்சர் அன்பழகன் தகவல்

முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

அறிவியல், பொறியியல் உட்பட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் டிச.2-ம் தேதி திறக்கப்படும். செயல்முறை வகுப்புகளை இணையவழியில் நடத்தமுடியாது. அதனால் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வகுப்புகள் நடத்தப்படும். மேலும், புதிதாக புயல் உருவாகி கனமழை எச்சரிக்கைஇருக்கும்பட்சத்தில் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x