Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

ராஜபாளையம் அருகே கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து தம்பதி படுகாயம்

ராஜபாளையம் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. ராஜேந்திரன்(57), அவரது மனைவி பாக்கியலட்சுமி (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x