Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

அமெரிக்கா உட்பட 3 நாடுகளுடன் மலபார் போர்ப் பயிற்சிநவம்பர் 3-ம் தேதி தொடக்கம்

புதுடெல்லி

கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய - அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் பயிற்சிக்கு 'மலபார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பான் கடற்படையும் இணைந்தது.

இந்த ஆண்டின் முதல்கட்ட 'மலபார்' போர்ப் பயிற்சி விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.

இரண்டாம் கட்ட 'மலபார்' போர் பயிற்சி வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கிகள் சுற்றித் திரிவதை ஆஸ்திரேலிய கடற்படை அண்மையில் கண்டுபிடித்து அழித்தது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கின. 'குவாட்' என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி முதல்முறையாக 'மலபார்' போர்ப் பயிற்சியில் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x