அமெரிக்கா உட்பட 3 நாடுகளுடன் மலபார் போர்ப் பயிற்சிநவம்பர் 3-ம் தேதி தொடக்கம்

அமெரிக்கா உட்பட 3 நாடுகளுடன் மலபார் போர்ப் பயிற்சிநவம்பர் 3-ம் தேதி தொடக்கம்
Updated on
1 min read

கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய - அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் பயிற்சிக்கு 'மலபார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பான் கடற்படையும் இணைந்தது.

இந்த ஆண்டின் முதல்கட்ட 'மலபார்' போர்ப் பயிற்சி விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.

இரண்டாம் கட்ட 'மலபார்' போர் பயிற்சி வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கிகள் சுற்றித் திரிவதை ஆஸ்திரேலிய கடற்படை அண்மையில் கண்டுபிடித்து அழித்தது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கின. 'குவாட்' என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி முதல்முறையாக 'மலபார்' போர்ப் பயிற்சியில் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in