Published : 01 Apr 2024 04:58 AM
Last Updated : 01 Apr 2024 04:58 AM

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

கோப்புப்படம்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்தது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இவர்களது விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (ஏப்.1) தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. தொடர்ந்து திருத்துதல் பணிகள் இன்று தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இப்பணியில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 6-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x