வாக்கு எண்ணிக்கைக்காக இன்று டாஸ்மாக் மூடல்: கடைகளில் அலைமோதிய கூட்டம்

வாக்கு எண்ணிக்கைக்காக இன்று டாஸ்மாக் மூடல்: கடைகளில் அலைமோதிய கூட்டம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடை​பெற்ற நிலை​யில் வாக்கு எண்​ணிக்கை இன்று நடை​பெறுகிறது.

தேர்​தலை முன்​னிட்டு மாநிலம் முழு​வதும் டாஸ்​மாக் மது​பானக் கடைகள் வாக்​குப்​ப​திவு நடை​பெறும் ஏப். 23-ம் தேதி​யும் அதற்கு முன்​பாக 2 நாட்​கள் ஏப்​.21, 22-ம் தேதி எனத் தொடர்ந்து 3 நாட்​களும், வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் மே 4-ம் தேதி​யும் மதுக்​கடைகள் மூடப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி வாக்​குப்​ப​திவுக்கு முன் 3 நாட்​கள் கடைகள் முடப்​பட்​ட​போது கடந்த 20-ம் தேதி மட்​டுமே ரூ.400 கோடிக்கு மது விற்​பனை நடை​பெற்​றது.

தமிழகம் முழு​வதும் நாளொன்​றுக்கு சராசரி​யாக ரூ.150 கோடிக்கு மது விற்​பனை நடை​பெறும் நிலை​யில் ஞாயிற்​றுக்​கிழமை​களில் கூடு​தலாக விற்​பனை நடை​பெறும்.

கடைகள் மூடப்​படு​வது தெரிந்​தால் அன்​றைய நாளுக்​கும் சேர்த்து முந்​தைய நாளே மதுப்​பிரியர்​கள் வாங்கி வைத்​துக்​கொள்​வார்​கள். அதன்​படி நேற்று ஏராள​மானோர் மதுக்​கடைகளில் குவிந்து மது பாட்​டில்​களை வாங்​கிச் சென்​றனர்.

ஒரு சிலர் இதைப் பயன்​படுத்தி கள்​ளத்​தன​மாக மது விற்​பனை செய்​ய​லாம் என்​ப​தால் அதைத் தடுக்க கண்​காணிப்​புப் பணி​களை மேற்​கொள்​ள​வும் அறி​வுறுத்​தப்​பட்​ட​தாக அதி​காரிகள் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கைக்காக இன்று டாஸ்மாக் மூடல்: கடைகளில் அலைமோதிய கூட்டம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 மே 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in