வழிகாட்டி மதிப்பை வரையறுக்க சார் பதிவாளர்களுக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட் உத்தரவு

Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
2 min read

மதுரை: வழி​காட்டி மதிப்பை வரையறுக்​கும் அதி​காரம் சார் பதி​வாளர்​களுக்கு இல்லை என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

மதுரை அப்​துல் கலாம் அறி​வியல் விவ​சா​யிகள் மற்​றும் பொது​மக்​கள் பாது​காப்​புச் சங்​கத்​தின் தலை​வர் அபெல் மூர்த்​தி, திரு​மங்​கலம் காசி​மாயன் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: விவ​சாய நிலங்​கள் விற்​பனை செய்​யப்​படும்​போது சந்தை மதிப்​பை​விட வழி​காட்டி மதிப்பு உயர்த்​தப்​பட்டு பத்​திரப்​ப​திவு செய்​யப்​படு​கிறது. இதனால் விவ​சாய நிலங்​களை கூடு​தல் விலைக்கு வாங்க யாரும் முன்​வரு​வ​தில்லை. விவ​சாய நிலங்​கள் தரிசு நிலங்​களாக மாறி வரு​கின்​றன.

எனவே, கிராமங்​களில் விவ​சாய நிலத்​தின் வழி​காட்டி மதிப்பை தேவை​யில்​லாமல் உயர்த்​து​வதை முறைப்​படுத்​த​வும், சட்​ட​விரோதச் செயல்​பாடு​களில் இருந்து விவ​சா​யத்​தை​யும், விவ​சா​யிகளை​யும் பாது​காக்​க​வும், நிலத்​தின் வழி​காட்டி மதிப்பை உயர்த்தி பத்​திரப்​ப​திவு கட்​ட​ணம் பெறு​வோர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் தெரி​வித்​திருந்​தனர்.

மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: இந்த வழக்​கில் மனு​தா​ரர் குற்​றச்​சாட்​டு​களுக்கு சான்​றுகளை தாக்​கல் செய்​ய​வில்​லை. பதிவுக்​குப் பிறகு சார் பதி​வாளர் அனுப்​பிய அறி​விப்பு ஆதா​ர​மாக அளிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த அறி​விப்​பில், 2018-ல் பதிவு செய்த ஆவணம் 2025-ல் துறை​சார் தணிக்கை செய்​யப்​பட்​ட​போது முத்​திரை​தாள் கட்​ட​ணம், பதிவுக் கட்​ட​ணம் குறை​வாக வசூலிக்​கப்​பட்​டது தெரிய​வந்​தது. கட்​ட​ணப் பாக்​கியை வசூலிக்க அறி​விப்பு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இவ்​விவ​காரம் தொடர்​பாக ஏற்​கெனவே சட்​டப்​படி எடுக்​கப்​பட்ட நிலைப்​பாடு உள்​ளது. கிரை​யம், உரிமை மாற்​றம், பரி​மாற்​றம், தானம், உரிமை விடு​விப்​பு, பினாமி உரிமை தீர்வு உள்​ளிட்ட முத்​திரைத்​தாள் கட்​ட​ணம் செலுத்​தப்பட வேண்​டிய ஆவணம் பதிவுக்கு வழங்​கும்​போது, ஆவணத்​தில் சொத்​தின் சந்தை மதிப்பு உண்​மை​யாக குறிப்​பிடப்​பட​வில்லை என பதிவு அதி​காரி கரு​தி​னால் ஆவணத்​தைப் பதிவு செய்​ய​லாம். பின்​னர், இந்​திய முத்​திரைத்​தாள் சட்​டத்​தின் பிரிவு 47 ஏ-ன் கீழ் சொத்​தின் சந்தை மதிப்​பை​யும் அதற்​கான சரி​யான முத்​திரைத்​தாள் கட்​ட​ணத்​தை​யும் தீர்​மானிக்க மாவட்ட ஆட்​சி​யரின் (முத்​திரைத்​தாள் பிரிவு) பரிந்​துரைக்கு அனுப்ப வேண்​டும்.

ஆவணத்​தில் குறிப்​பிடப்​பட்​டுள்ள சந்தை மதிப்​பின் துல்​லி​யம் குறித்து பதிவு செய்​யும் அதி​காரிக்கு தொடக்​கத்​திலிருந்தே சந்​தேகம் எழுந்​தால், பதிவு செய்​யும் நிலை​யிலேயே அதிக முத்​திரைத்​தாள் கட்​ட​ணத்​தைச் செலுத்த வேண்​டும் என வலி​யுறுத்த அவருக்கு அதி​காரம் இல்​லை. பதிவு அதி​காரிக்கு உள்ள ஒரே வழி ஆவணத்​தைப் பதிவு செய்​து​விட்டு மாவட்ட ஆட்​சி​யரிடம் (முத்​திரைத்​தாள் பிரிவு) பரிந்​துரைப்​பது மட்​டுமே ஆகும். இதன்​படி வழி​காட்டி மதிப்பை நிர்​ண​யிக்​கும் அதி​காரம் பதிவு அதி​காரிக்கு இல்​லை. வழி​காட்டி மதிப்​பு​களை நிர்​ண​யிக்​கும் அல்​லது திருத்தி அமைக்​கும் அதி​காரம் அதற்​கான குழு​விடம் மட்​டுமே உள்​ளது.

ஆவணம் பதிவு செய்​யப்​பட்டு 3 ஆண்​டுக்​குள் பற்​றாக்​குறை​யான முத்​திரைத் தாள் கட்​ட​ணத்தை வசூலிக்க வேண்​டும். அதற்​குப் பிறகு சட்​டப்​படி எந்​தவொரு வசூல் நடவடிக்​கை​யும் மேற்​கொள்ள முடி​யாது. இதனால் மனு​தா​ரர் கோரிக்கை தொடர்​பாக வேறு உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டிய​தில்​லை. நீதி​மன்​றத்​தின் அறி​வுறுத்​தல்​களை​யும், சட்ட வி​தி​களை​யும் சார் பதி​வாளர்​கள் சட்​டப்​படி பின்​பற்ற வேண்​டும்​. மனு முடிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ குறிப்பிட்டுள்ளனர்.

Santhanakoodu Festival
“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in