“பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார்” - ஆளுநர் ரவி மீது கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

“பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார்”  -  ஆளுநர் ரவி மீது கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
Updated on
2 min read

சட்​டப்​பேர​வையை வேண்​டுமென்றே புறக்​கணித்​து, பாஜக​வின் பிர​தி​நி​தி​யாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி செயல்​படு​வ​தாக பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

திமுக அமைப்​புச் ​செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி: சட்​டப்​பேர​வை​யில் இருந்து 3-வது ஆண்​டாக உரையை வாசிக்​காமல் வெளி​யேறி இருக்​கி​றார் ஆளுநர் ரவி. பிரதமர் மோடி 2019-ல் பங்​கேற்ற விழா​விலே தேசிய கீதம் மறுக்​கப்​பட்ட போது ஆளுநர் ரவி​யின் இதயம் ஏன் துடிக்​க​வில்​லை? மத்​திய அரசின் பிர​தி​நி​தி​யாக இருக்க வேண்​டிய ஆளுநர், பாஜக​வின் பிர​தி​நி​தி​யாக செயல்​படு​கி​றார். ஆளுநருக்கு அரசி​யல் ஆசை இருந்​தால், பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு வந்து தேர்​தலில் வென்று அரசி​யல் செய்​யட்​டும்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: ஆளுநர் தன் உரையை வாசிக்​காமல் வெளி​யேறி சட்​டப்​பேரவை மரபு​களை துச்​ச​மாக கருதி அவம​தித்து இருக்​கி​றார். தேசிய கீதம் பாட வில்லை என்று கூறி வேண்​டுமென்றே பேர​வையை புறக்​கணித்​துள்​ளார். இதற்​காக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யும் பாஜக அலு​வல​கத்​தில் இருந்து வெளி​யிடப்​பட்ட அறிக்கை போல் இருக்​கிறது. அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்​கும் ஆளுநரின் செயல்​பாடு கண்​டனத்​துக்​குரியது.

திக தலை​வர் கி.வீரமணி: அரசி​யலமைப்பு சட்​டத்தை மீறி, எதிர்க்​கட்சி தலை​வரை போல் நடந்து கொள்​கி​றார் ஆர்​.என்​.ர​வி. அதன் ஒரு பகு​தி​யாக திமுக​வுக்கு எதி​ரான தேர்​தல் பிரச்​சா​ரத்தை ஆர்​எஸ்​எஸ் பிரச்​சா​ரக​ராக இப்​போதே தொடங்​கி​விட்​டார். அரசி​யலமைப்பை கொச்​சைப்​படுத்​தும் தரம் தாழ்ந்த நடவடிக்கை இது.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் தனது கடமையை ஆற்​றாமல் வெளி​யேறி​யிருப்​பது அவரது வாடிக்​கை​யான அணுகு​முறை​தான். இதில் அதிர்ச்​சி​யடைய ஒன்​றுமில்​லை. அவர் இப்​பொறுப்​பில் இருக்​கும் வரை இத்​தகைய அடாவடிகளை தொடரவே செய்​வார். இது அவரது திட்​ட​மிட்ட அவை மரபு மீறலாகும். தொடர்ந்து சட்​டப்​பேர​வையை அவம​திக்​கும் அவரது போக்கு கண்​டனத்​துக்​குரியது.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்முகம்: ஒவ்​வொரு மாநில பேர​வைக்​கும் தனித்​தனி மரபு​கள் உள்​ளன. ஒரு மாநிலத்​தின் ஆளுநர் என்ற முறை​யில், அந்த மாநிலத்​தின் மரபு​களை கடை​பிடிக்க வேண்​டியது ஆளுநரின் கடமை. அதற்கு மாறாக, ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஆளுநர் அத்​து​மீறுகி​றார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்டியன்: சட்​டப்​பேர​வை​யில் உரை​யாற்​றி, கூட்​டத்​தொடரை தொடங்கி வைக்க வேண்​டிய ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, சட்​டப்​பேரவை மரபை உடைத்து சிதைக்​கும் முயற்​சி​யில் ஈடு​படு​கி​றார். எதிர்க்​கட்​சிகளும் சொல்ல முடி​யாத, அடிப்​படை ஆதா​ரம் இல்​லாத அரசி​யல் அவதூறுகளை வன்​மத்​துடன் வெளி​யிட்​டுள்​ளார். மலி​வான அரசி​யலில் ஈடு​படும் ஆர்​.என்​.ர​வி, ஒரு வினாடி​யும் ஆளுநர் மாளி​கை​யில் இருக்க தகு​தி​யற்​றவர்.

இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசிய தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன்: தமிழக அரசு தயா​ரித்து கொடுக்​கும் உரைகளை சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் வாசிப்​பது தான் மரபு. ஆனால் அவர் எதிர்க்​கட்​சிகளை விட ஒருபடி மேலே சென்​று, அரசு தயா​ரித்த உரைகளை படிக்​காமல் வெளிநடப்பு செய்​து, அரசுக்கு எதி​ராக ஆளுநர் பேசுவது அரசி​யலமைப்​புக்கு முரணானது.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழக அரசின் செயல் திட்​டங்​களும், அதனால் மக்​களுக்​குக் கிடைக்​கும் பயன்​களும் நிறைந்​திருக்க வேண்​டிய ஆளுநர் உரை, திமுக​வின் கனவை தூக்கி சுமந்​திருப்​பது பெரும் ஏமாற்​றம் அளிக்​கிறது. அதை வாசிக்​கு​மாறு ஆளுநரை நிர்​பந்​திருப்​பதும் கண்​டனத்​துக்​குரியது.

அதே​நேரம், நீண்ட நெடிய பாரம்​பரியமிக்க சட்​டப்​பேர​வை​யின் மரபு​களை மாற்ற கோரு​வது ஆளுநருக்கு அழகல்ல. இவர்​களு​டன் எஸ்​டிபிஐ மாநிலத்​ தலை​வர்​ நெல்​லை மு​பாரக்​ உள்​ளிட்​டோரும்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

“பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார்”  -  ஆளுநர் ரவி மீது கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: நடந்தது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in