தமிழக விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு உயர் செயல்திறன் பயிற்சி: எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்

தமிழக விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு உயர் செயல்திறன் பயிற்சி: எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: தமிழக விளை​யாட்டு பயிற்​சி​யாளர்​களுக்​கான உயர் செயல்​திறன் பயிற்சி முகாமை, எஸ்​டிஏடி உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாத ரெட்டி தொடங்கி வைத்​தார்.

ஒலிம்​பிக் போட்​டிகளில் அங்​கீகரிக்​கப்​பட்ட விளை​யாட்​டு​களில் அடுத்த 5 ஆண்​டு​களுக்​கான வளர்ச்​சியை முன்​னிட்​டு, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் (எஸ்​டிஏடி) மற்​றும் ஜே.எஸ்​.டபிள்யூ இன்​ஸ்​பயர் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் ஸ்போர்ட் இடையே​யான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

அதன்​படி, முதல்​கட்​ட​மாக தடகளம் மற்​றும் ஜூடோ பயிற்​சி​யாளர்​களுக்​கான 2 நாள் உயர் செயல்​திறன் பயிற்சி முகாம் ஜவஹர்​லால் நேரு விளை​யாட்டு அரங்​கில் நேற்று தொடங்​கியது.

முகாமில், தடகள விளை​யாட்டு பிரிவுக்கு நெதர்​லாந்து நாட்​டைச் சேர்ந்த ட்ராய் ஹாமில்​டன் டக்​ளஸுடன் ஜே.எஸ்​.டபிள்யூ பயிற்​சி​யாளர்​களும், ஜூடோபிரிவுக்கு துரோணாச்​சார்யா விருது பெற்ற ஜீவன் குமார் சர்​மா​வும் எஸ்​டிஏடி மற்​றும் விளை​யாட்டு சங்​கங்​களின் பயிற்​சி​யாளர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்​கின்​றனர்.

பயிற்சி முகாமை தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாத ரெட்டி தொடங்கி வைத்​தார்.

அப்​போது அவர் பேசுகை​யில், “தமிழக வீரர்​கள் ஒலிம்​பிக் மற்​றும் சர்​வ​தேச போட்​டிகளில் அதிக பதக்​கங்​களை வெல்​லும் வகை​யில், சென்​னை​யில் உலகத் தரம் வாய்ந்த ‘தமிழ்​நாடு ஒலிம்​பிக் நகரம்’ அமைக்​கப்​படும் என முதல்​வர் அறி​வித்​துள்​ளார்.

அதற்​கான சூழலை உரு​வாக்​கும் வித​மாக தமிழகத்​தின் 38 மாவட்​டங்​களி​லும் ஆண், பெண் இரு​பாலருக்​கு​மான விளை​யாட்டு விடு​தி​களை அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

அண்​மை​யில் 100-க்​கும் மேற்​பட்ட பயிற்​றுநர்​கள் புதி​தாக நியமிக்​கப்​பட்​டதோடு, வீரர்​களின் ஊட்​டச்​சத்து உணவுக்​காக ரூ.44.39 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

எஸ்​டிஏடி விளை​யாட்டு விடு​தி​களில் 2,600 வீரர், வீராங்​க​னை​கள் தங்கி பயிற்சி பெற்​று​வரு​கின்​றனர். கடந்த காமன்​வெல்த் போட்​டிகளில் பங்​கேற்ற 7 தமிழக வீரர்​களில் 6 பேர் இந்த விடு​தி​களைச் சேர்ந்​தவர்​கள்.

வீரர்​கள் வானமே எல்​லை​யாகக் கொண்டு பதக்​கங்​களை வெல்ல வேண்​டும் என்​றால், அவர்​களுக்கு உயர்தர மேம்​பட்ட பயிற்சி மற்​றும் அறி​வியல் சார்ந்த பயிற்​சி​யாளர்​கள் தேவை.

அதனாலேயே இந்த முன்​னெடுப்பு பயிற்​சி​யாளர்​களிடம் இருந்து தொடங்​கப்​பட்​டுள்​ளது. பயிற்​சி​யாளர்​கள் இந்த முகாமை முழு​மை​யாக பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.” என வலி​யுறுத்​தி​னார்.

நிகழ்​வில் இன்​ஸ்​பயர் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் ஸ்போர்ட் தலை​வர் மனிஷா மல்​ஹோத்​ரா, மாவட்ட வரு​வாய் அலு​வலர் ரெ.சுமன், பொது மேலா​ளர் எல்​.சுஜா​தா, தடகள சங்​கத்​தின் செயல் தலை​வர் லதா மற்​றும் ஜூடோ சங்​கத்​தின் தலை​மை நிர்​வாக அதி​காரி விஜய்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

தமிழக விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு உயர் செயல்திறன் பயிற்சி: எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்
டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in