இணைய வழி குற்​ற புகாரளிக்க உரிய வழிகாட்டுதல் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

இணைய வழி குற்​ற புகாரளிக்க உரிய வழிகாட்டுதல் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

மதுரை: இணை​ய​வழிக் குற்​றங்​கள் தொடர்​பாக எளி​தாக புகார் அளிக்க உரிய வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கக் கோரிய வழக்​கில் மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திருச்சி மாவட்​டம் திரு​வானைக்​கோ​வில் பகு​தி​யைச் சேர்ந்த வகுல​கிரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒரு​வரின் செல்​போன் எண்​ணுக்கு ஜூன் 24-ம் தேதி கூரியர் அலு​வல​கத்​தில் இருந்து அழைப்பு வந்​தது. அதில் பேசிய நபர் கூரியர் வந்​திருப்​ப​தாக​வும், தான் சொல்​லும் எண்​களை பதி​விடு​மாறும் தெரி​வித்​துள்​ளார். அந்த எண்​களை பதி​விட்​டதும் பெண் ஊழியரின் வாட்ஸ் அப் கணக்கு முடக்​கப்​பட்​டது. அவரது செல்​போன் எண்​ணில் இருந்து அவரது செல்​போனில் உள்ள தொடர்பு எண்​களுக்கு வாட்ஸ் அப்​பில் பணம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

உறவினர்கள் மூலம் இதுபற்றி அறிந்த பெண் ஊழியர் உடனடி​யாக சைபர் கிரைம் கட்​ட​ணமில்லா தொலைபேசி எண், இணை​யதளம் வழி​யாக புகாரை பதிவு செய்ய முடிய​வில்​லை. எனவே, யுபிஐ பணப்​பரிவர்த்​தனை மோசடி உள்​ளிட்ட இணைய வழிக் குற்​றங்​கள் தொடர்​பாக எளி​தில் புகார் அளிப்​ப​தற்கு உரிய வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​க​வும், புகார்​களை சுலப​மாக பதிவு செய்​யும் வகை​யிலும் இணை​யதளத்தை மேம்​படுத்த உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனுவை விசாரித்த நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு, இந்த மனு தொடர்​பாக மத்​திய, மாநில அரசு பதிலளிக்​க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​தனர்​.

இணைய வழி குற்​ற புகாரளிக்க உரிய வழிகாட்டுதல் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
“முட்டாள்தனமான விதிமீறல்!” - ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in