தேமுதிக 10, விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

தேமுதிக 10, விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
Updated on
2 min read

தி​முக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள தேமு​தி​க​வுக்கு 10 தொகு​தி​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. விடு​தலை சிறுத்​தைகள் கட்​சிக்கு 8 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. இது தொடர்​பான ஒப்​பந்​தங்​கள் நேற்று கையெழுத்​தானது.

திமுக கூட்​ட​ணி​யில் அடுத்​தடுத்து தொகுதி உடன்​பாடு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி வரு​கின்​றன. நேற்று காலை விசிக​வுக்கு 8 தொகு​தி​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. இதனையடுத்து நேற்று இரவு 7.15 மணி​யள​வில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பொருளாளர் எல்​.சுதீஷ் எம்​.பி, விஜய பிர​பாகரன் உள்​ளிட்​டோர் அண்ணா அறி​வால​யத்​தில் முதல்​வர் ஸ்டா​லினை சந்​தித்​தனர். இந்த சந்​திப்​பைத் தொடர்ந்து தேமு​தி​க​வுக்கு 10 தொகு​தி​களை ஒதுக்​கீடு செய்​யும் ஒப்​பந்​தத்​தில் ஸ்டா​லின், பிரேமலதா விஜய​காந்த் கையெழுத்​திட்​டனர்.

தற்​போதைய நிலை​யில் காங்​கிரஸ் 28, தேமு​திக 10, விசிக 8, சிபிஐ 5, சிபிஎம் 5, மதி​முக 4, முஸ்​லிம் லீக் 2, மமக 2, கொமதேக 2 என திமுக கூட்​ட​ணி​யில் இது​வரை 66 தொகு​தி​கள் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் பேசிய பிரேமல​தா, “எந்​தெந்த தொகு​தி​களில் தேமு​தி​க​வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்​கிறதோ அந்த தொகு​தி​களின் விருப்ப பட்​டியலை திமுக​விடம் கொடுத்து இருக்​கி​றோம். விரை​வில் எங்​களுக்​கான தொகு​தி​களை கேட்டு பெறு​வோம். 27-ம் தேதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​படும்; 1-ம் தேதி முதல் வேட்​புமனு தாக்​கல் செய்​வோம். மொத்​த​மாக 25 தொகு​தி​கள் அந்த பட்​டியலில் இருக்​கிறது. நாங்​கள் கடைசி​யாக திமுக கூட்​ட​ணிக்கு வந்​தோம், அதனால்​தான் தாமத​மாக கூட்​டணி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. நாங்​களும் தொகு​தி​களை விட்​டுக்​கொடுத்து இருக்​கி​றோம்” என்​றார்.

முன்னதாக நேற்று காலை சென்னை அறி​வால​யத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் விசிக தலை​வர் திரு​மாவளவன் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி, விசிக-வுக்கு 6 தனித் தொகு​தி​கள், 2 பொதுத் தொகு​தி​கள் என மொத்​தம் 8 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

ஒப்​பந்​தத்​துக்​குப் பின் செய்​தி​யாளர்​களிடம் திரு​மாவளவன், கூறிய​தாவது: எங்​கள் கட்​சி​யினர் இரட்டை இலக்​கத் தொகு​தி​கள் மற்​றும் ஒரு மாநிலங்​களவை உறுப்​பினர் பதவியைக் கோரினர். இருப்​பினும், மதவாத மற்​றும் சாதிவெறி சக்​தி​களை வீழ்த்த வேண்​டும் என்ற கூட்​ட​ணி​யின் நன்​மை​யைக் கருதி 8 தொகு​தி​களுக்கு உடன்​பட்​டுள்​ளோம். விசிக ஒரு அங்​கீகரிக்​கப்​பட்ட மாநிலக் கட்சி என்​ப​தால், எங்​கள் சொந்​தச் சின்​ன​மான பானை சின்​னத்​திலேயே போட்​டி​யிடு​வோம். திமுக வழங்​கி​யுள்ள இந்த இடங்​கள் இடது​சாரி அரசி​யலைப் பாது​காப்​ப​தற்​கான அங்​கீ​காரம்.

புதுச்​சேரி​யில் கடைசி நிமிடம் வரை கூட்​டணி உறுதி செய்​யப்​ப​டாத​தால், முன்​னெச்​சரிக்​கை​யாக ஊசுடு, நெட்​டப்​பாக்​கம் மற்​றும் உழவர்​கரை ஆகிய 3 தொகு​தி​களில் விசிக வேட்​புமனுத் தாக்​கல் செய்​துள்​ளது. எங்​களுக்கு ஒரு தொகுதி ஒதுக்​கப்​பட்ட நிலை​யிலும், அங்கு காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் மனு​வைத் திரும்​பப் பெறத் தயா​ராக இல்​லை. திமுக போட்​டி​யிடும் சில இடங்​களி​லும் காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் மனுத் தாக்​கல் செய்​திருப்​பது ‘ஃப்​ரெண்ட்லி ஃபைட்’ என்ற பெயரில் குழப்​பத்தை ஏற்​படுத்​தியுள்​ளது. எனவே, புதுச்​சேரி​யில் தனித்​துப் போட்டி என்று அறி​வித்​துள்ளோம். இருப்​பினும், மனு​வைத் திரும்​பப் பெற இன்​னும் கால அவகாசம் இருப்​ப​தால், பேச்​சு​வார்​த்தை மூலம் சுமுக முடிவு காண வாய்​ப்​புள்​ளது. இவ்​​வாறு அவர் தெரி​வித்​​தார்.

தேமுதிக 10, விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
234 தொகுதிகளிலும் மார்ச் 30-ல் நாதக வேட்பாளர்கள் மனு தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in