நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வு தொடங்கியது

முதல் நாளில் 1.24 லட்சம் பேர் பங்கேற்பு
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வு தொடங்கியது
Updated on
1 min read

சென்னை: இளநிலை பட்​டப்​படிப்​பு​களுக்​கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழு​வதும் தொடங்​கியது. முதல் நாள் தேர்​வில் ஒரு லட்​சத்து 24 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர்.

நாடு முழு​வதும் உள்ள மத்திய அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின் கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை படிப்​பு​களில் சேர கியூட் எனப்​படும் பல்​கலைக்​கழக பொதுநுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும்.

இத்​தேர்வை மத்திய அரசு சார்​பில் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நடத்தி வரு​கிறது. அந்த வகை​யில் 2026-2027-ம் கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான இளநிலை பட்​டப்​படிப்பு கியூட் நுழைவுத்​தேர்வு மே 11 முதல் 31 வரை நடை​பெறும் என என்​டிஏ அறி​வித்​தது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜனவரி 3-ல் தொடங்கி பிப்​ர​வரி 26-ம் தேதி முடிவடைந்​தது. இத்​தேர்​வுக்கு நாடு முழு​வதும் 15 லட்​சத்து 68 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட மாணவர்​கள் விண்​ணப்​பித்​தனர்.

அவர்​களுக்​கான ஹால் டிக்​கெட் மே 7-ந் தேதி இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், ஏற்​க​னவே அறி​வித்​த​படி கியூட் தேர்வு நேற்று தொடங்​கியது.

கணினி வழி​யில் நடத்​தப்​படும் இத்​தேர்வை சென்னை உள்பட இந்​தி​யா​வில் உள்ள முக்​கிய நகரங்​களி​லும், ஷார்​ஜா, அபு​தாபி, ரியாத், குவைத், மஸ்​கட், சிங்​கப்​பூர், கோலாலம்​பூர் உள்பட 14 சர்​வ​தேச நகரங்​களி​லும் ஒரு லட்​சத்து 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் எழு​தினர். இத்​தேர்வு மே 31-ம் தேதி முடிவடைகிறது.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வு தொடங்கியது
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு என்ஜிஓ சங்கம் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in