5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்: முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு

5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்: முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: திருச்சி கிழக்கு உட்பட காலி​யாக உள்ள 5 தொகு​தி​களில் இடைத்​தேர்​தலை நடத்​து​வதற்​கான முன்​னேற்​பாடு​களை உடனே தொடங்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தமிழ்​நாடு தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழகத்​தில் நடந்​து​முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திருச்சி கிழக்​கு, பெரம்​பூர் ஆகிய 2 தொகு​தி​களில் முதல்​வர் விஜய் போட்டி​யிட்டு வெற்றி பெற்​றிருந்​தார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்​எல்ஏ பதவியை அவர் ராஜி​னாமா செய்​தார். இதுதவிர நம்பிக்கை வாக்​கெடுப்​பில் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்த அதி​முக உறுப்​பினர்​கள் எஸ்​.ஜெயகு​மார் (பெருந்துறை), மரகதம் குமரவேல்​ (மது​ராந்​தகம்), பி.சத்​தி​ய​பா​மா (​தா​ராபுரம்), இசக்கி சுப்பையா (அம்​பாச​முத்​திரம்) ஆகியோர் தங்கள் பதவி​களை ராஜினாமா செய்​து​விட்டு அக்​கட்​சி​யில் சேர்ந்​தனர்.

இதையடுத்து திருச்சி கிழக்கு, பெருந்​துறை, மது​ராந்​தகம், தாராபுரம், அம்​பாச​முத்​திரம் ஆகிய தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன. பொது​வாக ஒரு தொகுதி காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டால், அதிலிருந்து 6 மாதங்​களில் இடைத்​தேர்​தல் நடத்​தவேண்​டும். அதன்​படி 5 தொகு​தி​களுக்கு இடைத்​தேர்​தல் விரை​வில் நடை​பெறவுள்​ளது. அதற்​கான முன்​னேற்​பாடு​களை வரும் ஜூன் 22-ம் தேதிக்​குள் செய்​யு​மாறு மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. மேலும், 5 தொகு​தி​களுக்​கும் தேர்​தல் நடத்​தும் அதி​காரி​களை​யும் தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக், சம்​மந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: காலி​யாக உள்ள 5 தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் அட்​ட​வணையை தேர்​தல் ஆணை​யம் எப்​போது வேண்​டு​மா​னாலும் அறிவிக்​கக்​கூடும். எனவே, அதற்​கான அனைத்து ஏற்​பாடு​களை மாவட்ட நிர்​வாகங்​கள் முன்​கூட்​டியே மேற்​கொள்ள வேண்​டும். தேர்​தல் ஆணை​யம் ஏற்​கெனவே வெளி​யிட்​டுள்ள தேர்​தல் நடத்தை விதி​முறை​களை முறை​யாக பின்​பற்ற வேண்​டும். தேர்​தல் நடை​பெறும் தொகுதி மாநக​ராட்சி அல்​லது நகராட்சி எல்​லைக்​குள் அமைந்​திருந்​தால், அந்த குறிப்​பிட்ட தொகு​திக்​குள் மட்​டும் தேர்​தல் நடத்தை விதி​கள் அமல்​படுத்​தப்​படும். அதே​நேரம் ஊரகப் பகு​தி​களை உள்​ளடக்​கிய தொகு​தி​யாக இருந்​தால், அந்த மாவட்​டம் முழு​மைக்​கும் தேர்​தல் நடத்தை விதி​கள் பொருந்​தும்.

தங்​கள் சொந்த தொகு​தி​களில் பணிபுரி​யும் அதி​காரி​கள் அல்​லது கடந்த 4 ஆண்​டு​களில் மூன்று ஆண்​டு​களுக்கு மேல் ஒரே இடத்​தில் பணி​யாற்​றிய அதி​காரி​கள் உடனே மாற்​றப்பட வேண்​டும். இது வரு​வாய் துறை அலு​வலர் மட்​டுமின்​றி, துணை ஆட்​சி​யர், தாசில்​தார் உள்​ளிட்​டோருக்​கும் பொருந்​தும். காவல்​துறை​யில் துணை காவல் கண்​காணிப்​பாளர், ஆய்​வாளர் மற்​றும் அதற்கு இணை​யான களப் பணி​யாளர்​களுக்​கும் இந்த விதி​முறை​கள் அமலாகும். மேலும், அடுத்த 6 மாதங்​களில் ஓய்​வு​பெறவுள்ள அதி​காரி​களுக்கு தேர்​தல் பணி​களில் இருந்து விலக்கு தரப்​படு​கிறது. குற்​றப் பின்​னணி அல்​லது துறைரீ​தி​யான நடவடிக்கை நிலு​வை​யில் உள்ள அதி​காரி​களை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்​தக்​கூ​டாது.

அதே​போல், 5 தொகு​தி​களுக்​கும் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மற்​றும் உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் தற்​போது பணி​யில் உள்​ளன​ரா, அந்​தத் தொகு​தி​களின் பகு​தி​கள் வேறு மாவட்​டங்​களில் உள்​ளன​வா, மாநக​ராட்சி எல்​லைக்​குள் வரு​கிறதா போன்ற விவரங்​களை சம்​பந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​கள் உடனே தெரிவிக்க வேண்​டும்.

மேலும், இடைத்​தேர்​தலுக்​கான தயாரிப்பு பணி​களின் ஒரு பகு​தி​யாக தேர்​தல் ஆணை​யம் வழங்​கிய படிவங்​கள் மூலம் தேவை​யான அனைத்து விவரங்​களை​யும் ஜூன் 22-ம் தேதிக்​குள் அனுப்பி வைக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் காலி​யாக உள்ள 5 தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் அறி​விப்பு விரை​வில் வெளி​யாகும் என்ற எதிர்​பார்ப்பு அரசி​யல்​ வட்​டாரங்​களில்​ உரு​வாகி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்: முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு
15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in