

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய வங்கக்கடல் முதல் கடலோர ஆந்திரா, தெலங்கானா, உள் கர்நாடகா வழியாக கடலோர கர்நாடகா வரை சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.