கொச்சி - தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

தூத்​துக்​குடி: கொச்​சி- தூத்​துக்​குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் அமைக்க இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​துக்கு அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் தூத்​துக்​குடி பகு​தி​யில் உள்ள தொழிற்​சாலைகள் இயற்கை எரி​வா​யுக்கு மாறு​வதுடன், தென்​மாவட்​டங்​களில் வீடு​களுக்கு குழாய் மூலம் தடை​யின்றி இயற்கை எரி​வாயு வழங்க வழி​வகை ஏற்​பட்​டுள்​ளது.

நாட்​டில் பெரு நகரங்​களில் மட்​டும் வீடு​களுக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வாயு (பிஎன்​ஜி) விநி​யோகம் செய்​யும் திட்​டம் தற்​போது நடை​முறை​யில் உள்​ளது. இந்த திட்​டத்தை நாடு முழு​வதும் விரி​வாக்​கம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

அதற்​கான பணி​களை மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகம் மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக கொச்சி முதல் தூத்​துக்​குடி வரை கன்​னி​யாகுமரி வழி​யாக இயற்கை எரி​வாயு குழாய் அமைக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது.

இந்த திட்​டத்தை செயல்​படுத்த இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​துக்கு (ஐஓசிஎல்) மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு ஒழுங்​கு​முறை வாரி​யம் கடந்த சில நாட்​களுக்கு முன்பு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

கொச்​சி- கன்​னி​யாகுமரி- தூத்​துக்​குடி இயற்கை எரி​வாயு குழாய் திட்​டம் (கேடிபிஎல்) மூலம் கொச்​சி​யில் அமைந்​துள்ள திரவ இயற்கை எரி​வாயு முனை​யத்​தில் (எல்​என்​ஜி) இருந்​து, தூத்​துக்​குடி வரை 425 கி.மீ. தொலை​வுக்கு குழாய் அமைக்​கப்​படு​கிறது.

இந்த திட்​டம், தின​மும் 6.84 மில்​லியன் மெட்​ரிக் ஸ்டாண்​டர்டு கியூபிக் மீட்​டர் (எம்​எம்​எஸ்​சிஎம்​டி) இயற்கை எரி​வாயு கொண்டு வரும் திறனுடன் செயல்​படுத்​தப்​படு​கிறது. இந்த திட்​டத்தை வடிவ​மைத்​தல், செயல்​படுத்​துதல், விரி​வாக்​கம் செய்​தல் ஆகிய​வற்றை இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனம் மேற்​கொள்​ளும்.

பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு ஒழுங்​கு​முறை வாரி​யத்​தின் அனு​ம​தியை தொடர்ந்து திட்​டத்​துக்​கான விரி​வான பொறி​யியல் ஆய்​வு​கள், வழித்தட ஆய்​வு​கள் போன்​றவை விரை​வில் தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த திட்​டத்தை வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் முடித்து பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பினும் அடுத்​தடுத்த பணி​களின் சூழ்​நிலைகளை பொறுத்து இது அமை​யும் என இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​தின் சார்​பில் ராம​நாத​புரம் - தூத்​துக்​குடி இடையே​யான இயற்கை எரி​வாயு குழாய் திட்​டம் ஏற்​க​னவே செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த திட்​டத்​தின் கீழ் ராம​நாத​புரத்​தில் இருந்து குழாய் மூலம் இயற்கை எரி​வாயு தூத்​துக்​குடிக்கு கொண்​டு​வரப்​படு​கிறது.

இந்த திட்​டத்​தின் மூலம் தூத்​துக்​குடி ஸ்பிக் ஆலை மற்​றும் அதை சுற்​றி​யுள்ள குடி​யிருப்​பு​களுக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வாயு விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது. மேலும், தூத்​துக்​குடி நகர் பகுதி முழு​வதும் வீடு​களுக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வாயு விநி​யோகம் செய்​வதற்​கான கட்​டமைப்பு வசதி​களை இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வனம் செய்து வரு​கிறது.

இதே​போல், தூத்​துக்​குடி​யில் இருந்து திருநெல்​வேலிக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வா​யுவை கொண்டு செல்​வதற்​கான குழாய் பதிக்​கும் பணி​களும் போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த சூழ்​நிலை​யில் கொச்​சி-கன்​னி​யாகுமரி- தூத்​துக்​குடி இயற்கை எரி​வாயு குழாய் திட்​டம் செயல்​படுத்​தப்​பட​வுள்​ளது. இதன் மூலம் தூத்​துக்​குடி மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள தொழிற்​சாலைகள் அனைத்​தும் பர்​னஸ் ஆயில் மற்​றும் நிலக்​கரி போன்ற எரிபொருளில் இருந்து இயற்கை எரி​வா​யுக்கு மாறும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதனால், கார்​பன் வெளி​யீடு குறைந்து சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​கள் குறை​யும். அது​போல, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி போன்ற தென்​மாவட்​டங்​களில் வீடு​களுக்கு குழாய் மூலம் இயற்கை எரி​வாயு விநி​யோகம் செய்​யும் திட்​டத்தை விரை​வாக செயல்​படுத்​தும் வாய்ப்​பும் ஏற்​பட்​டுள்​ள​தாக இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் நிறு​வன அதி​காரி​கள் தெரி​வித்​தனர். மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின்​ இந்​த முயற்​சி​யை தூத்​துக்​குடி தொழில்​துறையினர் வரவேற்றுள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in