திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று கிரிவலம் வந்த பக்தர்கள்.

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று கிரிவலம் வந்த பக்தர்கள்.

Updated on
1 min read

திரு​வண்​ணா​மலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திரு​வண்​ணாலை​யில் 2-வது நாளாக லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் நேற்று கிரிவலம் சென்றனர்.

சித்ரா பவுர்​ணமியையொட்டி பக்​தர்​கள் கிரிவலம் செல்ல ஏப்​.30-ம் தேதி இரவு 9.52 மணி முதல் மே 1-ம் தேதி இரவு 11.08 மணி வரை உகந்த நேரம் என கோயில் நிர்​வாகம் சார்​பில் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

அதன்​படி, சித்ரா பவுர்​ணமி நேற்று முன்​தினம் இரவு தொடங்​கியதை அடுத்து நேற்று அதி​காலை கோயில் திறக்​கப்​பட்டு மூல​வர் மற்​றும் அம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. தொடர்ந்​து, அம்​மன் சன்​னதி எதிரே உள்ள சித்​திர குப்​தன் சன்​ன​தி​யில் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன.

பின்​னர், சிறப்பு அலங்​காரத்​தில் அருள்​பாலித்த அண்​ணா​மலை​யார் மற்​றும் உண்​ணா​முலை அம்​மன் மற்​றும் சித்​திர குப்​தரை பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். பவுர்​ணமியையொட்டி சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

கோயி​லில் பக்​தர்​களுக்கு தர்​பூசணி,வெள்​ளரி, தண்​ணீர் பாட்​டில், நீர்​மோர் உள்​ளிட்​ட​வை​கள் வழங்​கப்​பட்​டன. தமிழகம் மட்​டுமின்​றி, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாடகா மற்​றும் வெளி​நாடு​களில் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கிரிவலம் சென்​றனர்.

தொடர்ந்​து, 2-வது நாளாக நேற்​றும் கிரிவலம் வந்​தனர். கடந்த 2 நாட்​களாக 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் கிரிவலம் வந்​துள்​ள​தாக மாவட்​ட நிர்​வாகம்​ தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று கிரிவலம் வந்த பக்தர்கள்.</p></div>
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்; விதிகளை வகுக்க கோரி வழக்கு: 8 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in