அண்ணாமலை, டிஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்குகளை பரஸ்பரம் வாபஸ் பெற்றனர்

அண்ணாமலை, டிஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்குகளை பரஸ்பரம் வாபஸ் பெற்றனர்
Updated on
1 min read

சென்னை: அண்​ணா​மலை, டி.ஆர்​.​பாலு ஆகியோர் ஒரு​வருக்கு ஒரு​வர் எதி​ராக தொடர்ந்த அவதூறு வழக்​கு​களை திடீரென பரஸ்​பரம் வாபஸ் பெற்​றுள்​ளனர்.

பாஜக மாநிலத் தலை​வ​ராக பதவி வகித்த அண்​ணா​மலை ‘டிஎம்கே ஃபைல்​ஸ்’ என்ற பெயரில் திமுக முன்​னாள் அமைச்​சர்​கள் பலரின் சொத்து விவரங்​களை கடந்த 2023-ம் ஆண்டு வெளி​யிட்​டார்.

அதில் குறிப்​பாக, திமுக பொருளாள​ரும், எம்​.பி.​யு​மான டி.ஆர்​.​பாலு மற்​றும் அவரது மகனும் முன்​னாள் அமைச்​சரு​மான டி.ஆர்​.பி. ராஜா மற்​றும் அவர்​களது குடும்​பத்​தா​ருக்கு சொந்​த​மான 21 நிறு​வனங்​கள் உள்பட ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்​துகள் இருப்​ப​தாகக் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார். அதையடுத்து அண்​ணா​மலைக்கு எதி​ராக டி.ஆர்​.​பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சைதாப்​பேட்டை 17-வது குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்​தது. விசா​ரணை ​யின்​போது நேரில் ஆஜரான டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை குறுக்கு விசா​ரணை நடத்​தி​னார். இந்த குறுக்கு விசா​ரணை​யின்​போது அண்​ணா​மலை​யும் தனது மனைவி பெயரில் சொத்​துகளை வாங்கி ஊழல் முறை​கேட்​டில் ஈடு​பட்​டுள்​ள​தாக டி.ஆர்​.​பாலு குற்​றம்​சாட்​டிய​தால், அண்​ணா​மலை​யும் டி.ஆர்​.​பாலு​வுக்கு எதி​ராக அவதூறு வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கும் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இந்​நிலை​யில் அண்​ணா​மலைக்கு எதி​ராக டி.ஆர்​.​பாலு​வும், டி.ஆர்​.​பாலு​வுக்கு எதி​ராக அண்​ணா​மலை​யும் தொடர்ந்​திருந்த இரு அவதூறு வழக்​கு​களை​யும் இரு​வரும் பரஸ்​பரம் வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக​வும், இந்த வழக்​கு​களின் விசா​ரணையை தொடர விரும்​ப​வில்லை என்​றும் மனுக்களை தாக்கல் செய்தனர். இதை ஏற்ற குற்றவியல் நடுவர் செந்தில்குமார் இருதரப்பு வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.

அண்ணாமலை, டிஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்குகளை பரஸ்பரம் வாபஸ் பெற்றனர்
அரசிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி: 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in