Published : 21 May 2023 05:58 AM
Last Updated : 21 May 2023 05:58 AM

உயர் நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் 23-ம் தேதி பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 கூடுதல் நீதிபதிகள், வரும் 23-ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக மாவட்ட முதன்மை நீதிபதிகளாக உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, இவர்கள் 4 பேரும், சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் வரும் 23-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x