Published : 13 Apr 2023 05:32 AM
Last Updated : 13 Apr 2023 05:32 AM

சட்டப்பேரவைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

பேரவைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனை சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்றார்.

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டப்பேரவைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றுவிட்டு கடந்த மாதம் 15-ம்தேதி சென்னை திரும்பினார்.

அன்று இரவு அவருக்கு திடீரெனநெஞ்சுவலி, மூச்சுத் திணறல், இருமல் ஏற்பட்டதால், சென்னைபோரூரில் உள்ள ராமச் சந்திரா மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்து வர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்தனர். இதற்கிடையில், கடந்த மாதம் 20-ம் தேதி அவருக்கு கரோனாதொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் குணமடைந்த அவர் கடந்த 15-ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த ஈவிகேஎஸ், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x