Published : 12 Apr 2023 06:24 PM
Last Updated : 12 Apr 2023 06:24 PM

2022-23-ல் டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய் - ரூ.8,000 கோடி அதிகரிப்பு

டாஸ்மாக் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மது விற்பனையாது தமிழ்நாடு மாநில வாணிப கழகம் என்று அழைக்கப்படும் என்று டாஸ்மாக் மூலம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 5,329 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், 2022-2023-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவை மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது.

2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.44,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,050 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.8,000 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x