Published : 08 Sep 2017 08:30 AM
Last Updated : 08 Sep 2017 08:30 AM

தினகரன் அணி எம்எல்ஏக்களுக்கு பேரவை தலைவர் நோட்டீஸ்

கடந்த ஆக.22-ம் தேதி முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். பேரவை கட்சி முடிவுகளை மீறியதாக, அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க அரசு கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவரிடம் பரிந்துரைத்தார். இதைத்தொடர்ந்து, 19 எம்எல்ஏக்களும் விளக்கம் அளிக்க பேரவைத்தலைவர் நோட்டீஸ் அனுப்பினார்.

அதற்கு முதலில் விளக்கம் அளித்த எம்எல்ஏக்கள், பின்னர் விரிவான விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரி கடந்த 5-ம் தேதி பேரவைத் தலைவருக்கு கடிதம் அளித்தனர். இதையேற்ற பேரவைத் தலைவர், எம்எல்ஏக்கள் வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x