Last Updated : 09 Apr, 2023 06:53 PM

2  

Published : 09 Apr 2023 06:53 PM
Last Updated : 09 Apr 2023 06:53 PM

விழுப்புரம் | அரசுப் பள்ளியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்கள் பாதத்தை குடும்பத்துடன் வணங்கி நெகிழ்ச்சி

ஆசிரியர்கல் காலில் விழும் முன்னாள் மாணவர்கள்

விழுப்புரம்: அரசு பள்ளியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

புதுச்சேரி மாநில எல்லையான திருக்கனூரை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியான விழுப்புரம் சித்தலம்பட்டில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இன்று வரை பயின்று பயனடைந்து வருகின்றனர்.

இநப் பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் நிறுவன அதிகாரிகளாகவும், பெரிய தொழில் அதிபர்களாகவும் வளர்ச்சியடைந்துள்ளனர்.

சித்தலம்பட்டு அரசுப் பள்ளியில் கடந்த 1986 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் "ஸ்கூல் பிரண்ட்ஸ் குரூப் சித்தலம்பட்டு" என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி இங்கு படித்த மாணவர்களை ஒன்றிணைத்தனர்.

இந்த முன்னாள் மாணவர்கள் தான் படித்த பள்ளிக்கு நாம் ஏதாவது ஒரு பொருள் உதவி செய்ய வேண்டும்= தமக்கு பாடம் சொல்லிக் கொடுத்து தம்மை வாழ்க்கையில் முன்னேற்றிய ஆசிரியர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி சித்தலம்பட்டு அரசுப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 86 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்த சுமார் 55 -வயது வரை உள்ள முன்னாள் மாணவர்கள 60-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி குருபூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின் மூலம் ஒவ்வொருவரும் பழைய நண்பர்கள் சந்தித்து தங்கள் நிகழ்வுகளையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி கவுரவித்தனர். மேலும் 86 ஆம் ஆண்டு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களிடம் படித்த மாணவர்களும், குடும்பத்தினரும், அவர்களின் குழந்தைகளும் வரிசையாக பாதம் தொட்டு வணங்கினர். பதிலுக்கு ஆசிரியர்களும், மலர் தூவி வாழ்த்தினார்கள்.

இதுபற்றி முன்னாள் மாணவர்கள் கூறுகையில், " ஆசிரியராக ஏராளமான ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும் அப்போதெல்லாம் கிடைக்காத சந்தோஷம் நம்மிடம் படித்த மாணவர்கள் நல் நிலைக்கு உயர்ந்ததைப் பார்க்கும் போது கிடைத்து. மருத்தவரை சந்திக்காமலேயே உடல்நிலை மேம்பட்டு விட்டது" என்றனர்.

முன்னாள் மாணவர்கள் கூறுகையில், "பாடம் கற்று தந்த ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் ஒரே காரணத்துக்காகவே மாணவர் சந்திப்பு நிகழ்வை நடத்தினோம். அதில் எங்கள் குழந்தைகளும் பங்கேற்றதுடன் அப்போது படித்த மாணவர்கள் பார்த்தபோது மகிழ்ச்சியுடன் கிடைத்த மனநிறைவுக்கு ஈடேயில்லை" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x