Published : 03 Apr 2023 06:03 AM
Last Updated : 03 Apr 2023 06:03 AM

சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீதான நடவடிக்கை

சென்னை: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மண்டல போக்குவரத்து அலுவலர்கள் மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கை: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள் போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தப்படுவதாகத் தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, போக்குவரத்து பயன்பாட்டுக்குச் சொந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து சிறப்புச் சோதனைகளை நடத்த வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு மட்டுமின்றி, வாடகை வாகன உரிமையாளர்களுக்கான வருவாய் இழப்பையும் தடுக்க முடியும்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x