Published : 03 Apr 2023 06:26 AM
Last Updated : 03 Apr 2023 06:26 AM

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் விலைவாசி அதிகரிக்கும்: அமைச்சர் கீதாஜீவன் கருத்து

விளாத்திகுளத்தில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

கோவில்பட்டி: விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா, திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது:

திமுக 1949-ல் தொடங்கப் பட்டது. தற்போது 73-வது ஆண்டில் உள்ளோம். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்க த்துக்காக தொடங்கப் பட்டது தான் திமுக.

மதத்துக்கு எதிரான கட்சி திமுக என குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. தற்போது சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.

சமையல் எரிவாயு விலையை ரூ.450-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி விட்டனர். விலையை குறைக்க வேண்டுமென மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். மத்திய அரசு தான் விலையை குறைக்க வேண்டும்.

தமிழக முதல்வர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார். திமுகவில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அனைவரும் இணைந்து செயல்படும் போது நிச்சயம் வெற்றி பெறலாம் என்றார்.

கூட்டத்தில், விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் வேலுச் சாமி, விளாத்திகுளம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ஏ.சி.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x