Published : 20 Sep 2017 07:50 AM
Last Updated : 20 Sep 2017 07:50 AM
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறுபடுவதால் தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அவ்வப்போது மாறுபடுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது.
இதே காரணத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழை பெய்யும். மேலும் இந்த மழை ஓரிரு நாட்களுக்கு தொடரும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி பூந்தமல்லி, சென்னையில் 30 மிமீ மழை பெய்துள்ளது.
வாழப்பாடி, தேவலா, பெரியாறு, ஏற்காடு, சின்னக்கல்லாறு, வால்பாறையில் 20 மிமீ மழையும், ஊட்டி, அரக்கோணம், நடுவட்டம், செம்பரம்பாக்கம், தஞ்சாவூர், தளி, தாமரைப்பாக்கம், சோழவரம், குடவாசலில் 10 மிமீ மழையும் பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT