Published : 02 Mar 2023 10:57 AM
Last Updated : 02 Mar 2023 10:57 AM

ஈரோடு இடைத்தேர்தல் | 8400 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் முன்னிலை - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

வாக்கு எண்ணிக்கை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 8400 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற நிலையில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல் சுற்று முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, ஈவிகேஎஸ் இளங்கோவன் 8429 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 2873 வாக்குகள் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x