Published : 21 Sep 2017 07:39 AM
Last Updated : 21 Sep 2017 07:39 AM
பொதுக்குழு தீர்மானங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுகி, இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர், நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இரு அணிகளும் இணைந்ததை தெரிவித்து ஏற்கெனவே அளித்த பிரமாணப் பத்திரங்களை திரும்பப் பெறவும் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் மீண்டும் பெறவும் பழனிசாமி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக அமைச்சர்கள் டெல்லி சென்றனர். அங்கு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினர். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கே.பி.முனுசாமி தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இந்தக் குழுவினர் ஆலோசித்து, அதன்பின் உரிய ஆவணங்களுடன் விரைவில் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT