Published : 03 May 2017 12:14 PM
Last Updated : 03 May 2017 12:14 PM
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அது நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது என தவறான வாதம் வைக்கப்படுகிறது.
இதுவரைக்கும் தமிழகத்தில் இருந்து மருத்துவர்களாக படித்து பணியாற்றுபவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. எல்லோரையும் விட சிறப்பாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீட் தேர்வு தரத்தை உயர்த்துவதற்காக கொண்டுவரப்படவில்லை.
இத்தனை ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் போராடி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்'' என்றார் கனிமொழி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT