Published : 04 Feb 2023 06:46 AM
Last Updated : 04 Feb 2023 06:46 AM

சென்னை | தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணிக்கு 3 நாள் சிறப்பு ரயில்

சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே இன்றுமுதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா நாளை (5-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அரக்கோணம் - திருத்தணி இடையே இன்று(4-ம் தேதி) முதல் 6-ம் தேதி வரை இந்த சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து காலை 10.23, பகல் 1 மற்றும் பிற்பகல் 2.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில், திருத்தணியில் இருந்து காலை 11.15, பகல் 1.50 மற்றும் பிற்பகல் 3.40 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x