Published : 29 Dec 2022 04:10 PM
Last Updated : 29 Dec 2022 04:10 PM

புத்தாண்டுக் கொண்டாட்டம் | சென்னையில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் | கோப்புப் படம்

சென்னை: சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. 31-ம் தேதி இரவு முதல் 1-ம் தேதி காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் > காமராஜர் சாலை மற்றும் இராஜாஜி சாலை:

  • கடற்கரை உட்புற சாலையில் 31ம் தேதி இரவு 7 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
  • காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை31ம் தேதி இரவு 7 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
  • அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
  • டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
  • பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
  • வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை, விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை, நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
  • தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
  • ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் 2000 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
  • அடையாரிலிந்து பாரிஸ் நோக்கி செல்லும் மாநகர பேருந்துக்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, இராயப்பேட்டை, கத்திட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக உங்கள் இலக்கை சென்றடையலாம்.
  • மாநகர பேருந்துக்கள் பாரிஸிலிருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஆ.ர்.பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு , என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.
  • அனைத்து மேம்பாலங்களும் 31ம் தேதி இரவு 10 மணி முதல் 1ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.

வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

  • சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை வரை – ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
  • வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
  • பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை x பாரதி சாலை சந்திப்பில் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
  • பொதுப்பணித்துறை அலுவலகச் சாலை.
  • டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
  • லாயிட்ஸ் சாலை (நடேசன் சாலையை நோக்கி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் அருகில் இருந்து - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)
  • இராணி மேரி கல்லூரி வளாகம்.

எலியட்ஸ் கடற்கரை: 31ம் தேதி 8 மணிக்கு 6வது அவென்யூ நோக்கி 1ம் தேதி காலை மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. 6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு, 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

  • பெசன்ட் நகர் 4வது அவென்யூ - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 3வது மெயின் ரோடு - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 4வது மெயின் ரோடு - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 5வது அவென்யூ - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 2 வது அவென்யூ - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்
  • பெசன்ட் நகர் 3வது அவென்யூ- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

ANPR கேமராக்கள் மூலம் கண்காணிப்பு: ANPR கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாகச சவாரி செய்தல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x