Published : 29 Dec 2022 04:09 AM
Last Updated : 29 Dec 2022 04:09 AM

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் - இன்று முதல் டிக்கெட் முன்பதிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.29) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

தாம்பரத்தில் இருந்து ஜன. 12-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06021) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து ஜன.13-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (06022) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து ஜன.13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06041) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து ஜன.16-ம் தேதி மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில்(06042) புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்த டையும்.

இதுதவிர, கொச்சுவேலி-தாம்பரம்(06044-06043), எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல் (06046-06045), தாம்பரம்-திருநெல்வேலி (06057-06058) ஆகிய 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.29) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x