Published : 15 Dec 2016 10:19 AM
Last Updated : 15 Dec 2016 10:19 AM

பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும்: புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்கக் கோரி புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர் களிடம் சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நேற்று கூறியதாவது:

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்பது புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. புதுச்சேரி எம்எல்ஏக்கள் 4 பேரும் சென்னை சென்று சசிகலாவைப் பார்த்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்று தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். இது தொடர்பாக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் முடிவு எடுத்துள்ளோம். அத்தீர்மானத்தை கட்சி தலைமைக்கு அனுப்புவோம். இக்கருத்தை எதிர்ப்போர் துரோகிகள் - மாற்றுக்கட்சியின் கைக்கூலிகள் என்றார்.

பேட்டியின்போது அதிமுக எம்எல்ஏக்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x