Published : 15 Dec 2016 10:19 AM
Last Updated : 15 Dec 2016 10:19 AM
அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்கக் கோரி புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர் களிடம் சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நேற்று கூறியதாவது:
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்பது புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. புதுச்சேரி எம்எல்ஏக்கள் 4 பேரும் சென்னை சென்று சசிகலாவைப் பார்த்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்று தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். இது தொடர்பாக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் முடிவு எடுத்துள்ளோம். அத்தீர்மானத்தை கட்சி தலைமைக்கு அனுப்புவோம். இக்கருத்தை எதிர்ப்போர் துரோகிகள் - மாற்றுக்கட்சியின் கைக்கூலிகள் என்றார்.
பேட்டியின்போது அதிமுக எம்எல்ஏக்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT