Published : 02 Dec 2016 08:31 AM
Last Updated : 02 Dec 2016 08:31 AM

கண்ணாடிகள் உடைந்து விழும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்: விமான நிலைய புதிய இயக்குநர் உறுதி

சென்னை விமான நிலைய புதிய இயக்குநராக ஜி.சந்திரமவுலி பொறுப்பேற்றுக் கொண்டார். கண்ணாடிகள் உடைந்து விழு வது உள்ளிட்ட அனைத்து பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னை விமான நிலைய இயக்குநராக இருந்த தீபக் சாஸ்திரி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து புதிய இயக்குநராக ஜி.சந்திரமவுலி (55) நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1989-ம் ஆண்டு குஜராத் மாநிலம் வதோதரா விமான நிலையத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜி னியராக பணியைத் தொடங்கிய இவர், கொல்கத்தா, சென்னை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் பணியாற்றியுள் ளார். கடைசியாக கேரள மாநிலம் கன்னூர் விமான நிலையத்தில் மேலாண்மை இயக்குநராக இருந்த இவர், தற்போது சென்னை விமான நிலைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜி.சந்திரமவுலி ‘தி இந்து’விடம் கூறும்போது, “சென்னை விமான நிலையத்தில் செய்து முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. கண்ணாடிகள் உடைந்து விழுவது உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். சிறந்த விமான நிலையமாக மாற்றுவ தற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படும்” என்றார்.

சிறந்த விமான நிலையமாக சென்னையை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x